ராணுவம் இல்லாத உலகம் வேண்டும்: சேவா சங்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

ராணுவமே இல்லாத உலகம் வேண்டும் என வேதாந்த்ரி மகரிஷி உபதேசம் மேற்கொண்டார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு உள்ளது. இங்குள்ள உலகசதாய சேவா சங்கத்தில் நடந்தகருத்தரங்கில், அதன் நிறுவனர் வேதாந்த்ரி மகரிஷி பேசியாதாவது:

மனிதனின் வாழ்நாள் ஒரு குறுகிய அளவில் மட்டுமே உள்ளது. இந்த வரையறைக்குட்பட்ட வாழ்க்கையைவளமுள்ளதாகவும், சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

அனைவரும் வாழத் தெரிந்து அதன்படி வாழ வேண்டும். அதற்கான ஒழுங்கு முறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு ஒழுங்கு முறை இல்லாதபோது ஏழ்மை, வறுமை, அறியாமை ஏற்படுகிறது. இதுவேவன்முறைக்கும், போருக்கும் வழிவகுக்கிறது.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தியே ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டது. இந்த ஐக்கிய நாடுகள் சபையில்,இப்போது 5 நாடுகள் பலம் பொருந்தியவையாக திகழ்கிறது.

இந்த 5 நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு போர் அவசியமாகிறது. இந்த நாடுகள்,போர் இருந்தால் மட்டுமே ஆயுதங்களை விற்பனை செய்யமுடியும். ஆயுத வர்த்தகம் இதனால் மேம்படும்.

எனவே, ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய நடைமுறையை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆயுதஅபாயமற்ற, ராணுவம் இல்லாத ஒரு உலகை இது உருவாக்க வேண்டும்.

ராணுவத்தை இழந்தால் கொந்தளிப்பு ஏற்படலாம். இந்த கொந்தளிப்பை தவிர்க்க நாடுகள் வளமடையும்.வறுமையை ஒழிக்கும் நிலை உருவாகும் என்றார் வேதாத்திரி மகரிஷி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+