பொள்ளாச்சியில் மின்தடை: தொழிலாளர்கள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
பொள்ளாச்சியில் ஏற்பட்ட மின் தடையால் கயிறு தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.தொழிலாளர்கள் வேலையின்றி திரும்பினர்.
பொள்ளாச்சிப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம். இதனால் தென்னையின் உப தொழிலாக கயிறு தொழில்கள்உள்ளன. இதனால் இங்கு கயிறு தொழிற்சாலைகள் இங்கு அதிகம்.
நெய்வேலியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக பொள்ளச்சியில் மின் தடைஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொள்ளாச்சி பகுதி முழுவதும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மின் தடையால், கயிறு தொழிற்சாலைகளில்வேலையின்றி பணியாளர்கள் வெறுமனே அமர்ந்திருந்தனர்.
இந்த தொழிற்சாலையில் மின்சாரம் சுயமாக ஜெனேரட்டர் மூலம் உற்பத்தி செய்யப்பட்டால், கயிறு உற்பத்திச்செலவு மிகவும் அதிகரிக்கும். இதனால், உற்பத்தியை எந்த தொழிற்சாலையும் மேற்கொள்ளவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications