ஜெ. படம் மாட்ட விரும்பாத பேரூராட்சித் தலைவர் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

கோவை:

முதல்வர் ஜெயலலிதா படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விரும்பாத பேரூராட்சித் தலைவர் ராஜினாமா செய்துகடிதம் எழுதியுள்ளார்.

திருப்பூர் அருகே உள்ள 15 வேலம்பாளையம் பேரூராட்சித் தலைவராக இருப்பவர் (பொறுப்பு) ப.பெரியசாமி.இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சித் தலைவரானார்.

இவரது அறையில் முதல்வராக இருந்த காலத்தில் கருணாநிதியின் படம் மாட்டப்பட்டிருக்கும். இப்போதுமுதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்துஅதிமுகவினர் படத்தை மாற்றக் கோரினர்.

ஆனால், பேரூராட்சித் தலைவர், மற்ற உறுப்பினர்களைக் கேட்டுத்தான் படம் மாற்றவேண்டும் எனவலியுறுத்தியுள்ளார். அதிமுகவினரோ, பிடிவாதமாக கருணாநிதியின் படத்தை அகற்றி விட்டு முதல்வர் ஜெயலலிதாபடத்தை மாட்டியுள்ளார்.

இதைக் கண்டித்து பேரூராட்சித் தலைவர் பெரியசாமி அலுவலகத்தை விட்டு வெளியேறினார். ஜெ, படத்தின் கீழ்தான் பணியாற்ற விரும்பவில்லை எனக் கூறி, அதனை அகற்ற வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். ஆனால்,ஐந்து நாட்களாகியும் படம் அகற்றப்படமால் இருந்தது. இதைக் கண்ட பெரியசாமி, மீண்டும் அலுவலகத்திற்குள்நுழையாமல் ராஜினாமா கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டார்.

இது குறித்து பெரியசாமி கூறுகையில், லஞ்ச ஒழிப்புக்காக நான் இயக்கம் நடத்தி வருகிறேன். லஞ்ச ஊழலில்தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தின் கீழ் அமர்ந்து நான் அலுவல் பார்க்க விரும்பவில்லை. அராஜகம் தொடங்கிவிட்டது என்பதற்கு இது உதாரணம். பரிதி இளம் வழுதி தாக்கப்பட்டதைக் கண்டித்தும் நான் ராஜினமாசெய்கிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+