சபாநாயகராக காளிமுத்து போட்டியின்றி தேர்வு
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகராக டாக்டர் கா.காளிமுத்துவும், துணை சபாநாயகராக வரகூர் அருணாச்சலமும்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல்புதன்கிழமை நடந்தது. நண்பகல் வரைவேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நேரம் வரை காளிமுத்துவும், வரகூர் அருணாச்சலமும் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இதையடுத்து காளிமுத்து சபாநாயகராகவும், அருணாச்சலம் துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டதாகசட்டசபை முதன்மைச் செயலாளர் ஜானகிராமன் தெரிவித்தார்.
இதுதொடர்பான முறையான அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப் சட்டசபையில் வியாழக்கிழமைவெளியிடுவார். அதற்குப் பிறகு காளிமுத்து சபாநாயகராகப் பதவியேற்பார்.
பின்னர் துணை சபாநாயகராக வரகூர் அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டதை காளிமுத்து அறிவிப்பார். அதன்பிறகு அருணாச்சலம் பதவியேற்பார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கவுள்ள இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.