புலிகள் மீதான தடையை நீக்க முடியாது: இலங்கை அரசு
கொழும்பு:
புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை எக்காரணத்தைக் கொண்டும் நீக்க மாட்டோம் என்று இலங்கை அரசுதிட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கும் விதத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேஅமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கி வைக்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மே மாத இறுதியில் இருதரப்பினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினால் ஒழியபேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.
தங்களது நிலையை நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் மூலம் இலங்கை அரசுக்குத்தெரியப்படுத்தியுள்ளனர் புலிகள்.
ஆனால் இலங்கை அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இலங்கை இனப்பிரச்சனைனுக்குத் தீர்வுகாண்பதற்காக புலிகள் மீது விதித்துள்ள தண்டனையை எந்தக் காரணத்தைக் கொண்டும் நீக்க முடியாது என்றுஇலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications