For Daily Alerts
Just In
குஜராத்தை நாளை புயல் தாக்குகிறது
காந்திநகர்:
கடந்த 2 நாட்களாகக் குஜராத்திலிருந்து 550 கிலோமீட்டர் தூரத்தில் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த புயல்,ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரையைக் கடக்கும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது.
வெள்ளிக்கிழமை வரை ஒரே இடத்தில் நிலையாக இருந்த புயல் சின்னம், மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில்வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அப்புயல் 1,600 கிலோமீட்டர் நீளமுள்ள குஜராத் கடற்கரையைத் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, May 26, 2001, 5:30 [IST]