Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் 1 முதல் தபால் கட்டணம் உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் தபால் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி 2001-02ஆம் ஆண்டுக்காக மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜட்டில் இந்தத்தபால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இதுவரை 25 பைசாவாக இருந்த தபால் கார்டின் விலை 50 பைசாவாக இருக்கும். அச்சிடப்பட்ட தபால்கார்டின் விலை ரூ.3 ஆக உயர்ந்துள்ளது. போட்டித் தபால் கார்டின் விலை 4 ரூபாயிலிருந்து 5 ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளது.

20 கிராம் வரையிலான கடிதங்களுக்கு ரூ.4 மதிப்புள்ள தபால் வில்லைகள் ஒட்டப்பட வேண்டும். அதன் பிறகு,ஒவ்வொரு கூடுதல் 20 கிராமுக்கும் ரூ.1 கூடுதல் தபால் வில்லைகள் ஒட்ட வேண்டும்.

பதிவுத் தபால் கட்டணம் 14 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்ந்துள்ளது. அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கானசலுகைக் கட்டணம் ரூ.1.25-லிருந்து ரூ.2.50ஆக உயர்ந்துள்ளது. பதிவுத் தபால் ஒப்புதல் அட்டைக் கட்டணம் 3ரூபாயாக உயர்ந்துள்ளது.

புத்தகப் பார்சலுக்கான கட்டணம் 50 பைசாவிலிருந்து 1 ரூபாயாக உயர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்டசெய்தித்தாள்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராமுக்குக் குறைந்த பார்சல்களுக்கான கட்டணம் 16ரூபாய் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+