சோனியாவை சந்தித்தார் பாண்டி.முதல்வர் சண்முகம்
டெல்லி:
பாண்டிச்சேரியில் புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியுடன் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் சனிக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நாராயணசாமியும் உடனிருந்தார்.
பேச்சுவார்த்தை முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ், தமாகா அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. முதல்வர் சண்முகம் முதலமைச்சராக,ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்றுக் கொண்டபோது அமைச்சர்கள் யாரும்பதவியேற்கவில்லை.
அமைச்சர்கள் பட்டியலின் இறுதிவடிவம் இன்னும் 2 நாட்களில் வெளியாகும். அதாவது திங்கள்கிழமைஅமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
முன்னதாக புதுவை முதல்வர் சண்முகம், வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாமற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.