அறுவை சிகிச்சைக்குப்பிறகு வாஜ்பாய் குணமடைய 6 வாரங்கள்
நியூயார்க்:
அறுவை சிகிச்சை முடிந்தபின் பிரதமர் வாஜ்பாய் குறைந்தது 6 வாரங்களுக்குப் பிறகுதான் பூரண குணமடையமுடியும் என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ள நியூயார்க் டாக்டர் சித்தரஞ்சன் ரனவதே சனிக்கிழமைகூறினார்.
நியூயார்க்கில் உள்ள லெனாக்ஸ் மருத்துவமனையில் டாக்டர் சித்தரஞ்சன் கூறுகையில், ஏற்கனவே இந்திய பிரதமர்வாஜ்பாய்க்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இப்போது வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இந்த முறை அறுவை சிகிச்சை நடந்துமுடிந்ததும் பிரதமர் வாஜ்பாய் குறைந்தது 6 வாரங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்குப்பிறகு பிரதமர் வாஜ்பாய் ஆறு வாரங்கள் ஓய்வு எடுத்தால்தான் பூரண குணமடைய முடியும்.
எனது டாக்டர்கள் குழு முழுவதையும் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக டெல்லிக்கு அழைத்துக்கொண்டு செல்லவுள்ளேன். மேலும் பிரதமரின் உடல் எடை மற்றும் வயது ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதிக சிரத்தையுடன் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
அறுவை சிகிச்சை நடந்து முடிந்து சில தினங்களில் வாஜ்பாய் எழுந்து நடமாடலாம். ஆனால் ஒரு மாதம் அல்லதுஆறு வாரங்கள் வாஜ்பாய் அலுவலகப் பணிகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்றார்.
முன்னதாக, ஜூன் முதல் வாரத்தில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக பிரதமர்வாஜ்பாய் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம் மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய்க்கு இடது காலில்அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதே வலது காலிலும் வலி இருந்தது. ஆனால் உடனடியாக வலது காலில்அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்ததால் உடனடியாக அவருக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை நடக்கவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.