For Daily Alerts
Just In
கட்டடம் இடிந்து 8 பேர் பலி
கான்பூர்:
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியானார்கள்.
பலத்த சூறைக்காற்று காரணமாக, ஒரு "சரக்கு" கோடவுன் சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்டகட்டட இடிபாடுகளுக்கிடையில் 36 பேர் சிக்கிக் கொண்டனர்.
இதில் 8 பேர் பலியாகி விட்டனர். மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டு விட்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 2பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திராவில் கட்டடம் இடிந்து 5 பேர் சாவு
ஆந்திரப்பிரதேச மாநிலத்திலும் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்துவிழுந்ததில், 5 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கட்டடத் தொழிலாளர்கள். இச்சம்பவத்தில் மேலும்10 கட்டடத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
Story first published: Sunday, May 27, 2001, 5:30 [IST]