தமிழகத்தை உலுக்கிய திருவள்ளூர் தொழிற்சாலை விபத்து.. மிகவும் வேதனை அடைந்தேன்.. பிரதமர் மோடி இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் பெரியபாளையம் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அமோனியா வாயு கசிவு விபத்தை கேட்டு வேதனை அடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 70க்கு மேற்பட்டோர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

PM Modi Condoles Loss of Lives in Ammonia Gas Leak Tragedy

பிரதமர் மோடி இரங்கல்

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 3 பேர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளார்.

மேலும் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தவர்களின் குடுபத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்தார். பலரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் திருவள்ளூர் அமோனியா வாயு கசிந்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "அமோனியா வாயு கசிவு விபத்தை கேட்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஆளுநர் அர்லேகர் இரங்கல்

முன்னதாக ஆளுநர் அர்லேக்கரும் இந்த சவம்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பல உயிர்கள் பலியானதும், ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதும் மிகுந்த வேதனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட அவர், அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த கடினமான நேரத்தில் மனவலிமையும் தைரியமும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். அதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைந்து முழு உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் தனது பிரார்த்தனையை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+