"மாவட்டங்களுக்கு ஜாதித் தலைவர்கள் பெயர் வேண்டாம்
சென்னை:
மாவட்டங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மீண்டும் ஜாதித் தலைவர்கள் பெயரை சூட்ட வேண்டாம்என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.
வாழப்பாடி ராமமூர்த்தி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபைத் தேர்தலில் ஜாதிகளுக்கும்,ஜாதிக் கட்சிகளுக்கும் எதிராக மக்கள் உறுதியான, மரண அடி கொடுக்கும் தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்களுக்கு மீண்டும் ஜாதித் தலைவர்களின் பெயரை வைக்கஅரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசின் இந்த முடிவு வருத்தம் தருகிறது. மக்கள் ஜாதியப் போக்கிற்கு எதிராக வெளிக்காட்டியிருக்கும்உணர்வினை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மீண்டும் ஜாதித் தலைவர்களின் பெயர்களை சூட்டுவோம் என்றுஅறிவித்திருப்பது மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது போலாகும்.
தமிழகத்தின் அமைதியை உத்தேசித்து ஜாதித் தலைவர்களது பெயரை சூட்டுவது என்ற முடிவினை தமிழக அரசுகைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் வாழப்பாடி.