வாஜ்பாய்-இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
கொழும்பு:
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே இந்திய பிரதமர்வாஜ்பாயை இந்த வார இறுதியில் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பு டெல்லியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே கூறுகையில், இந்த வாரம் வியாழக்கிழமைகொழும்பிலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறேன்.
இந்தியா செல்லும் நான் முதலில் டெல்லியில் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளேன்.வாஜ்பாயை சந்தித்த பின் சென்னை வழியாக கொழும்பு திரும்புகிறேன்.
அப்போது தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசுவேன்.
இலங்கையில் ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அடுத்த மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளது. இது குறித்து பிரதமர் வாஜ்பாயிடம் நான் கூறப்போவதாக பல பத்திரிக்கைகளில் செய்திகள்வந்துள்ளன. இது தவறான செய்தி என்றார் ரனில் விக்ரமசிங்கே.
ஐ.ஏ.என்.எஸ்.