அவசரமாக கூடுகிறது திமுக பொதுக்குழு கூட்டம்
சென்னை:
சென்னையில் திமுக பொதுக்குழு அவசரமாகத் திங்கள்கிழமை கூடுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் கல்வி அமைச்சருமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
எழும்பூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் சபாநாயகருமான பரிதி இளம்வழுதியை கைது செய்து ஜாமீனில்வெளிவரமுடியாமல் போலீஸார் செய்து விட்டனர்.
அடுத்ததாக ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜன் மீது பொய்யான வழக்கு ஒன்றைப் போட்டு கைதுசெய்துள்ளனர்.
இதே போல் செங்கல்பட்டு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பரசுராமன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்திகைது செய்துள்ளனர்.
இவ்வாறு பொய்யான வழக்குகள் போட்டு திமுகவினர் பலரை சிறையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்அதிமுகவினர்.
இது குறித்து விவாதிப்பதற்காகவும், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துவிவாதிப்பதற்காகவும் திமுக பொதுக்குழு திங்கள்கிழமை கூடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.