புலிகள் தாக்குதலில் தாய்-மகள் சாவு
கொழும்பு:
இலங்கையில் உள்ள போட்வில் பகுதியில் உள்ள காவல் நிலையத்தைக் குறி வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல்நடத்தியதில் அப்பகுதியில் வசித்து வந்த தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதே போல் இதே பகுதியில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு போட்வில்லில் உள்ளகாவல்நிலையத்தை நோக்கி புலிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் உள்ளபோலீஸாரும் திருப்பித் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்த தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வீட்டு உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போல் யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னாரில் புலிகள் மறைந்திருந்த 2 இடங்களில் ராணுவ வீரர்கள்நடத்திய தாக்குதலில் 2 புலிகள் கொல்லப்பட்டனர்.
இதே போல் சாவகச்சேரியில் புலிகள் கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர்காயமடைந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications