ஆழியாறு அணையில் விழுந்து வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
ஆழியாறு அணையில் தவறி விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்துள்ள நொச்சிமலையைச் சேர்ந்தவர் பண்டாரி நாதன். இவரது மகன் சீனிவாசன் (20).
இவரும், இவரது நண்பர் சாந்தகுமார் மற்றும் சிலரும் ஆழியாறு அணைக்கு சுற்றுலா சென்றனர். பொள்ளாச்சிஅருகே உள்ள இந்த அணைப் பகுதியில் சுற்றிப் பார்த்தனர்.
பின்னர், ஆழியாறு அணைப் பகுதியில் உள்ள படகுத் துறைக்குச் சென்றனர். அங்கு கால் தவறி சீனிவாசன்தண்ணீருக்குள் விழுந்தார். அவர் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications