தேவர்சிலைக்கு செருப்புமாலை: தென்மாவட்டங்களில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு செருப்பு மாலைபோடப்பட்டிருந்ததை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. பல பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலருகேயுள்ளவெண்கலத்தாலான முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிலர் செருப்பு மாலைபோட்டுவிட்டு ஓடி விட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை சிலையை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் தேவர் சிலைக்கு போடப்பட்டிருந்த செருப்பு மலையை அகற்றினர்.

தேவர்சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்ட செய்தி நகரில் பரவியதும் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதி வழியாக சென்ற பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பல பேருந்துகள் சேதமடைந்தன. இதனால் விருதுநகர் மாவட்டத்தின் பல இடங்களிலும் பதட்டம் நிலவியது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பதட்டம் நிலவி வருகிறது. பல பகுதிகளில் உள்ள கடைகளும்அடைக்கப்பட்டுள்ளன.

பதட்டம் காரணமாக விருதுநகர் வழியாக தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும்பேருந்துகளின் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.

பேருந்துகள் பதட்டம் இல்லாத பகுதிகள் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

தேவர்சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டது காரணமாக ஜாதி மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதியில்போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், சேத்தூர், புளியரை, சிவகிரி, கரிவலம்வந்தநல்லூர்போன்ற ஊர்களிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+