For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதனை படைத்த கோவை மாணவிகள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் கோவை மாணவிகள் பலர் சாதனை படைந்துள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி மதுமிதா டாக்டராக விருப்பம் தெரிவித்துள்ளார்.

கோவை அவிலா கான்வென்டைச் சேர்ந்த மாணவி மதுமிதா, பிளஸ் டூ தேர்வில் தாவரவியல் பாடத்தில் 200மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இது குறித்து மகிழ்ச்சிதெரிவித்த மதுமிதா கூறியதாவது:

எனது தந்தை டாக்டராகப் பணியாற்றி வருகிறார். காரமடையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் அவரைப் போலவே நானும் டாக்டர் ஆவேன். டாக்டராகி பொதுமக்களுக்குச் சேவை செய்வதே எனதுநோக்கம்.

நான் கடந்த 10ம் வகுப்புத் தேர்விலும் 500 மதிப்பெண்களுக்கு 462 மதிப்பெண்கள் பெற்று நீலகிரி மாவட்டத்தில்முதலிடம் பெற்றேன். தற்போது இந்த முறை மாநில அளவில் முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சியே என்றார்.

பொருளாதார பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி வித்யா, பொருளாதார மேதையாவேன் எனத்தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் கோவை அவிலா கான்வென்டில் படித்த மாணவி வித்யா, 200க்கு 199மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வகித்துள்ளார். இவரது சகோதரர் ஸ்ரீராம் சி.ஏ படித்து வருகிறார். இவரது தந்தைஅக்ஷயா என்டர் பிரைசஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.

மாநிலத்தில் முதலிடம் பெற்றது குறித்து மாணவி வித்யா கூறியதாவது:

நான் 7ம் வகுப்பு முதல் ஒரே பள்ளியில் படித்து வருகிறேன். மாநிலத்தில்முதலிடம் பெறுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது எனக்கு எதிர்பாராத மகிழ்ச்சியே. நான் பெற்ற இந்த வெற்றிக்கு பெற்றோர் மற்றும்ஆசிரியர்கள் அளித்த உறுதி தான் காரணம். வருங்காலத்தில், நான் மன்மோகன்சிங் போன்ற பொருளாதாரமேதைகளில் ஒருவராக வரவேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.

மனையியல் பாடத்தில் கோவை மாணவி கலைவாணி மாநிலத்தில் 3வது இடம் பெற்றார். கோவைஅவிநாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். மனையியல் பாடத்தில் 200 மதிப்பெண்ணிற்கு 188 மார்க்குகள்பெற்று மாநிலத்தில் 3வது இடம் பெற்றுள்ளார்.

பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப் பெண்களுக்கு 996 மதிப்பெண்கள் பெற்றுள்ள இவர், மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வு எழுதியுள்ளார். டாக்டராகி மருத்துவ சேவை செய்வதே இவரது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தி பாடத்தில் தமிழக மாணவி சங்கீதா மாநிலத்தில் 3வது இடம் பெற்றுள்ளார். கோவை அவிலா கான்வெண்டில்படித்து வந்த இந்த மாணவி, இந்தி பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்பெற்றேன்.

நான் இந்தியில் முதலிடம் பெற எனது டீச்சர் சந்தியாவும் ஒரு காரணம். பெற்றோர்களின் ஊக்கம் என்னைசாதனையாளராக மாற்றியது. வருங்காலத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது விருப்பம்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X