இன்டர்நெட்டில் கல்லூரி அட்மிஷன்
பெங்களூர்:
காலேஜ் அட்மிஷனுக்கு விண்ணப்பம் வாங்க இனி வரிசையாக நிற்க வேண்டியஅவசியமில்லை. எல்லாவற்றையும் இன்டர்நெட்டிலேயே முடித்துவிடலாம்.
இந்த வகையில் முதன் முதலாக ஆன்லைனில் அடியெடுத்து வைக்கிறது பெங்களூரில்உள்ள இந்தியாவின் தலைசிறந்த தூய ஜோசப் வணிகக் கல்லூரி.
இன்டர்நெட்டிலேயே விண்ணப்பத்தை நிரப்பி, அங்கேயே சமர்ப்பித்துவிடலாம்.அதன்பிறகு, அங்கேயே ஒரு மாதிரிக் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை அப்படியே பிரிண்ட் எடுத்து, கையெழுத்திட்டு, கூடவே ரூ.200-க்கானடிடி-யையும் தபாலில் அனுப்பி வைத்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் வேலைமுடிந்துவிடும். இதற்கான ரசீதை உடனடியாக கல்லூரியும் அனுப்பி வைக்கிறது.
படிப்பு, மதிப்பெண்கள், ஒதுக்கீடு ஆகியவற்றிற்கேற்ப, இந்த சாப்ட்வேரேகல்லூரிக்குத் தேவையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து விடுகிறது.
"என்னதான் ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், அதை நம்பாத சில மாணவர்கள்,நேரிலும் வந்து வேறு விண்ணப்பங்களை வாங்கி, நிரப்பிக் கொடுத்துவிட்டுச்செல்கிறார்கள். இதற்கு இன்னும் நிறைய காலமாகும். என்றாலும் இதையே ஆரம்பமாகவைத்துக் கொள்ளலாமே" என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறார் இந்தக்கல்லூரியின் முதல்வர் ஏவ்லின் டிசவுசா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications