For Daily Alerts
Just In
அசுத்த நீரைக் குடித்த 3 சிறுவர்கள் சாவு
சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் மேல் நிலைத் தொட்டியில் இருந்த அசுத்த நீரைக் குடித்த 3 சிறுவர், சிறுமியர் பரிதாபமாகஇறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு மேல் நிலைக் குடிநீர்த் தொட்டிஉள்ளது. பல காலமாக அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தத் தொட்டியிலிருந்த அசுத்த நீரை சிலர் குடித்துள்ளனர். இதையடுத்து 20 பேருக்கும் மேல்வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கினர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் 3 சிறுவர், சிறுமியர் உயிரிழந்தனர். ஒருவர் சீரியஸாக உள்ளார். இதுகுறித்து போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, May 29, 2001, 5:30 [IST]