பரூக் அப்துல்லா மகனைக் கொல்ல முயற்சி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
மத்திய வர்த்தகத் தொழில்துறை இணை அமைச்சரும் காஷ்மீர் மாநில முதல்வர் பரூக்அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா தீவிரவாதிகளின் கொலைமுயற்சியிலிருந்து தப்பினார்.
நவாக்காடலில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியிலிருந்து அவர் வெளியேவரும்போது, தீவிரவாதிகள் அவரை நோக்கி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.
அம்முயற்சியில் அவர் தப்பியதால், தீவிரவாதிகள் சராமாரியாகத் துப்பாக்கியால் சுடஆரம்பித்தனர். இதில் 2 கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications