பரிதி மீது மேலும் 2 வழக்குகள்
சென்னை:
தி.மு.க. எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி மீது மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டுஅவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போதுவன்முறையில் ஈடுபட்டதாக கூறி பரிதி இளம்வழுதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஅவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது அவர் மீது ஆயுதங்ககள் வைத்திருந்ததாகவும், பொதுமக்களைமிரட்டியதாகவும் மேலும் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.அவருக்கு உடல் நிலைசரியில்லாததால் அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பரிதி இளம்வழுதி தனக்கு செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய. ஜாமீன் மீது உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார்.
நான் நிரபராதி. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எந்த குற்றமும் செய்யாத என்னைகைது செய்துள்ளனர். நான் எம்.எல்.ஏவாக பதவியேற்க வேண்டும் எனவே என்னைஜாமீனில் விடுவிக்க வேண்டும்.
என்னை போலீஸ் காவலில் வைத்தது தவறு. என்னை போலீஸ் காவலில் வைக்குமாறுஎந்த மனுவையும் அரசு தாக்கல் செய்யவில்லை.
உயர் நீதிமன்றத்தில் இதை மறைத்து என் ஜாமீனை தடை செய்து உத்தரவுபெற்றுள்ளனர். என் ஜாமீனை ரத்து செய்யுமாறு அரசு மனு தாக்கல் செய்தது தவறானதுஎன அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு செவ்வாய்க்கிழமை நீதிபதி மலை சுப்ரமணியன் முன் விசாரணைக்குவருகிறது.