For Daily Alerts
Just In
சட்டசபை காங். தலைவராக யசோதா தேர்வு
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.யசோதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் கட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட வேண்டும்.
ஆனால் பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தலைவர் பதவியை அடைய விருப்பம் தெரிவித்ததால் பெரும்குழப்பம் ஏற்பட்டது. இதனால் சட்டசபை கூடி சில நாட்களாகியும் தலைவர் தேர்வு நிறைவு பெறவில்லை.
இந்த நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவராக டி.யசோதா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் மூத்தவரானயசோதா, 3 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்தவர்.
துணைத் தலைவராக எச்.எம்.ராஜுவும், போளூர் வரதன் கொறடாவாகவும், ஜெயக்குமார் செயலாளராகவும்,மகேஸ்வரி பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, May 29, 2001, 5:30 [IST]