For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டை அருகே உள்ள அய்யர்பாடியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரதுமகள் அன்னபூரணி (17). இவர் குளித்தலை அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

இவர் செவ்வாய்க்கிழமை மதிப்பெண் பட்டியலை இன்டர்நெட் மூலம் பெற்றுள்ளார். அப்போது ஒரு பாடத்தில்தோல்வியடைந்திருப்பது குறித்து மனம் வருந்தினார். இதையடுத்து வீட்டிற்கு வந்தவுடன் மண்ணெண்ணையைஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

தீக்காயமுற்ற அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதே போன்று கோவை மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகள் தேவி (18). இவரும்பிளஸ் டூ தேர்வில் தோல்விடைந்தார். இதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X