ப.சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ மீது வழக்கு
சென்னை:
சென்னை புரசைவாக்கம் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீதுவிதிமுறைக்குப் புறம்பாக குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து பொழுதுபோக்கு கிளப்பை நடத்தியதாக போலீஸார்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பெரம்பூர் அருகே ஜவஹர் நகரில் எம்.எல்.ஏ ரங்கநாதனுக்குச் சொந்தமான சென்னை ராயல் கிளப் என்றபொழுதுபோக்கு கிளப் உள்ளது. இந்த கிளப் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட வேண்டும்என்பது விதி. ஆனால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து இது இயங்குவதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து கமிஷனர் முத்துக்கருப்பன் உத்தரவின்பேரில் போலீஸார் மாறுவேடத்தில் கிளப்பிற்குச் சென்றுசோதனை நடத்தினர். அப்போது இரவு 11 மணிக்கு மேலும் கிளப் இயங்கவே மாறுவேடத்தில் இருந்த போலீஸார்கிளப் துணைத் தலைவர் தாமஸ் செல்வராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்துள்ளனர்.
கிளப்பின் தலைவர் எம்.எல்.ஏ. ரங்கநாதன் மற்றும் 12 பேர் மீதும் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.போலீஸாரின் நடவடிக்கை குறித்து அறிந்த ரங்கநாதன் எழும்பூர் 5-வது மெட்ரோபாலிடன் கோர்ட்டில் ஆஜராகிதன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு மனுச் செய்தார். மனுவை ஏற்ற நீதிபதி ரங்கநாதனை ஜாமீனில் விடுதலைசெய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 12 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட் வளாகத்தில் ரங்கநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை அசிங்கப்படுத்த வேண்டும்,களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொய்யான காரணத்தைக் காட்டி என் மீது போலீஸார்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை சட்டரீதியாகசந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications