கோவையில் 14 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மாவட்டத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் 14 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் புதிய அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு பல அதிரடியாக அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். போலீஸ் துறையில் இந்த அதிரடி மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது.

கோவை மாவட்டத்திற்கு இரு அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இவர்கள் முதல் முதலாக கோவை வந்தபோதுஅமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி ஜெயராமன் தொழில் துறை அமைச்சராகவும், மேட்டுப்பாளையம் ஏ.கே செல்வராஜ் வீட்டுவசதிவாரிய அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கோவை வந்ததும், இவர்கள் முதலில் கலந்து கொண்ட நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையிலான அரசுஅதிகாரிகளின் சந்திப்பு தான். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் ஜெயராமன் அதிகாரிகளை ஒருபிடி பிடித்தார்.

பின்னர், போலீஸ் எஸ்.பி.,யிடம், "ஒரே ஸ்டேஷனில், பல ஆண்டுகளாக கட்டப் பஞ்சாயத்து நடத்தியே காலத்தைஒட்டி வரும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எஸ்.பி., உடனடியாக செயல்பட்டார். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துஸ்டேஷன்களிலும் உள்ள சப் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்தார். இவ்வாறு 14 பேர்அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+