For Daily Alerts
Just In
கைது நடவடிக்கையில் அரசின் தலையீடு இல்லை: ஜெ.
சென்னை:
திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்படுவது காவல்துறையின்நடவடிக்கையே தவிர, அதில் அரசின் தலையீடு எதுவும் கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்விளக்கம் அளித்தார்.
பல வழக்குகளில் தொடர்புடைய திமுக எம்.எல்.ஏ.க்களும், அதன் தோழமை கட்சி எம்.எல்.ஏ.க்களும் கடந்த சிலநாட்களாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இது அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. சட்டத்தை மீறி நடப்பவர்கள் மீது மட்டும்தான்காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மீறுபவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று விளக்கமளித்தார்முதல்வர் ஜெயலலிதா.
Comments
Story first published: Wednesday, May 30, 2001, 5:30 [IST]