நான் அப்படிச் செய்தேன்... இவர் இப்படி செய்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எங்கள் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் போலீஸ் அதிகாரிகளைஜெயலலிதா மாற்றம் செய்து வருகிறார் என முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

திமுக மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் மாநிலம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துவருகின்றனர். ஜெயலலிதா அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து போலீசும் அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்படும்போது போலீஸ் அதிகாரிகளை மாற்றுவது சகஜம் தான். ஆனால், இப்படிஒட்டுமொத்தமாக அதிகாரிகள் மாற்றப்படுவது இது தான் முதல்முறையாகும்.

டி.ஜி.பியாக உள்ள ராஜகோபாலன் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர். இருந்தாலும் அவரை டி.ஜி.பியாக நான்நியமித்தேன். அவர் ஒரு வழக்கில் தவறான சில பேரை கைது செய்துவிட்டதாகக் கூட செய்திகள் வந்தன. ஆனால்,அதையெல்லாம் மீறி அவரை நான் டி.ஜி.பியாக நியமித்தேன்.

அதேபோல எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த மூத்த அதிகாரி அலெக்சாண்டரையும் நான் மாற்றவில்லை.அவருக்கு நல்ல பதவியைத் தான் தந்தேன்.

ஆனால், தனது பேச்சைக் கேட்டு ஆடும் அதிகாரிகளை ஜெயலலிதா உயர் பதவிகளில் நியமித்து வருகிறார். பிறஅதிகாரிகளை பந்தாடி வருகிறார் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+