இலங்கையில் பத்திரிக்கைள் மீதான சென்சார் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் பத்திரிக்கைகள் மீது இருந்து வந்த சென்சார் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர்சந்திரிகா புதன்கிழமை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு புலிகளுக்கும் ராணுவத்துகும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தில் இருந்தபோது இந்த தணிக்கைஅமல்படுத்தப்பட்டது. இதன்படி ராணுவத்தின் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் எந்தப் பத்திரிக்கையும்இலங்கையில் வெளிவற முடியாது என்ற நிலை கடந்த ஓராண்டாக நிலவி வந்தது.
இந்த தணிக்கைக்கு வெளிநாட்டுப் பத்திரிக்கைகளும் தப்பவில்லை.
தினந்தோறும் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்கு ராணுவத்தின் அனுமதியை நாளிதழ்கள் பெற வேண்டியநிர்பந்தம் இருந்து வந்தது.
இதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிக்கைகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இப்போது இந்தத் தடைநீக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications