கோர்ட்டில் மயங்கி விழுந்தார் பரிதி இளம்வழுதி
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கொண்டு வரப்பட்ட தி.மு.க.எம்.எல்.ஏ பரிதி இளம்வழுதியைபோலீஸார் தாக்கியதாக அவர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலின்போது எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பரிதி இளம்வழுதி மற்றும்அ.தி.மு.க ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையே பெரும் மோதல்ஏற்பட்டது. இதுதொடர்பாக பரிதி இளம்வழுதியும், ஜான் பாண்டியனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரிதி இளம்வழுதி மீது செவ்வாய்க்கிழமை மேலும் 2 வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவரை கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை சென்னைஎழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார்.
காலையிலேயே அவர்கள் வந்து விட்டாலும்கூட மாலையில்தான் ஆஜராக வேண்டும் என்பதால் வேனிலேயேபரிதி வைக்கப்பட்டு இருந்தார். அவரை அணுகிய செய்தியாளர்களிடம் பரிதி பேச முற்பட்டார். அதற்கு போலீஸார்அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திருவல்லிக்கேணி துணை போலீஸ்கமிஷனர் ரங்கராஜன் பரிதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. செய்தியாளர்கள் சிலரும் இந்த மோதலில் கீழேதள்ளப்பட்டனர்.
போலீஸ் தாக்குதலில் மயங்கி விழுந்த பரிதி இளம்வழுதி பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுதன்னைப் போலீஸார் தாக்கியதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகுபோலீஸாரின் வேண்டுகோளையேற்று 1 நாள் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும்,விசாரணையின்போது பரிதியின் வழக்கறிஞர்கள் 2 பேர் உடனிருக்கலாம் என்றும் நீதிபதி பூபாலன் உத்தரவிட்டார்.
பின்னர் பரிதி வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னைக் கொல்ல முயற்சி நடக்கிறது.போலீஸார் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர். எனது உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு போலீஸாரும்,இந்த அரசும், கோர்ட்டும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளேன். என்னை எம்.எல்.ஏவாக பதவியேற்க விடாமல் தடுக்க முயற்சிநடக்கிறது. 31-ம் தேதிக்குள் நான் பதவியேற்க வேண்டும். அதைத் தடுப்பதற்காகத்தான் பொய்யான வழக்கைபோட்டிருக்கிறார்கள். எனது அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒரு வழக்கு கூட போட்டதில்லை என்றார் பரிதி.