ப.சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ மீது வழக்கு
சென்னை:
சென்னை புரசைவாக்கம் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீதுவிதிமுறைக்குப் புறம்பாக குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து பொழுதுபோக்கு கிளப்பை நடத்தியதாக போலீஸார்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பெரம்பூர் அருகே ஜவஹர் நகரில் எம்.எல்.ஏ ரங்கநாதனுக்குச் சொந்தமான சென்னை ராயல் கிளப் என்றபொழுதுபோக்கு கிளப் உள்ளது. இந்த கிளப் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட வேண்டும்என்பது விதி. ஆனால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து இது இயங்குவதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து கமிஷனர் முத்துக்கருப்பன் உத்தரவின்பேரில் போலீஸார் மாறுவேடத்தில் கிளப்பிற்குச் சென்றுசோதனை நடத்தினர். அப்போது இரவு 11 மணிக்கு மேலும் கிளப் இயங்கவே மாறுவேடத்தில் இருந்த போலீஸார்கிளப் துணைத் தலைவர் தாமஸ் செல்வராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்துள்ளனர்.
கிளப்பின் தலைவர் எம்.எல்.ஏ. ரங்கநாதன் மற்றும் 12 பேர் மீதும் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.போலீஸாரின் நடவடிக்கை குறித்து அறிந்த ரங்கநாதன் எழும்பூர் 5-வது மெட்ரோபாலிடன் கோர்ட்டில் ஆஜராகிதன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு மனுச் செய்தார். மனுவை ஏற்ற நீதிபதி ரங்கநாதனை ஜாமீனில் விடுதலைசெய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 12 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட் வளாகத்தில் ரங்கநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை அசிங்கப்படுத்த வேண்டும்,களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொய்யான காரணத்தைக் காட்டி என் மீது போலீஸார்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை சட்டரீதியாகசந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications