ஆற்றில் கவிழ்ந்தது பஸ்: பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
மேட்டுப்பாளையம்:
ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளயம் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் கல்லாறில் கவிழ்ந்தது. பஸ்விபத்துக்குள்ளாகியும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சம்பவத்தன்று ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு நோக்கி ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்கல்லாறு என்ற இடத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாகபஸ்சின் டயர் வெடித்தது.
இதில் பஸ் சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்தது நொறுங்கியது. இந்த பஸ்சில் பயணம் செய்த 25 பயணிகள்இவ்விபத்தில் காயமடைந்தனர்.
பஸ் சிறிது தூரம் சென்று கீழே விழுந்திருந்தால், முழுவதுமாக சேதமடைந்திருக்கும். ஆனால் பஸ்விபத்துக்குள்ளாகியும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications