ரங்கநாதன் கைது: சபையிலிருந்து திமுக வெளிநடப்பு
சென்னை:
தமாகா ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுகவும்,அதன் தோழமை கட்சிகளும் புதன்கிழமை சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தன.
புதன்கிழமை சட்டசபை கூடியதும் தமாகா ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதன் கைது செய்யப்பட்டதைசபாநாயகர் காளிமுத்து சட்டசபையில் முறையாக அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுக, எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமையை ஆற்ற விடாமல் தடுக்கிறது என்று கூறி திமுகவும்,அதன் தோழமை கட்சிகளும் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தன.
சபையிலிருந்து வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக அரசுஉள்நோக்கத்துடன் செயல்படுகிறது. காவல்துறையின் அராஜகப் போக்கு கண்டிக்கத் தக்கது.
சட்டசபை உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் திமுக சபையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறதுஎன்றார்.
திமுக கூட்டணியில் உள்ள பாஜக சட்டசபைக் கட்சித் தலைவர் லட்சுமண் கூறுகையில், பொய்யானகுற்றச்சாட்டுக்களைக் கூறி திமுக எம்.எல்.ஏ.க்களின் மீதும், திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மீதும்நடவடிக்கை எடுத்து வருகிறது அதிமுக. இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறோம் என்றார்.
எம்.ஜி.ஆர்.அதிமுக சட்டசபைத் தலைவர் ஆஸ்டின் கூறுகையில், அதிமுக அரசு பழிவாங்கும் விதத்தில் நடந்துகொள்கிறது. இதைக் கண்டித்து நாங்கள் சபையை விட்டு வெளியேறுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications