தமிழகத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள்
ஆஸ்டின் (மீண்டும் எழுந்து):
அப்போது ஆஸ்டினும் மீண்டும் எழுந்து விடாமல் தொடர்ந்து பேசினார்.
நாங்கள் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டோம். தன்மானத்தை இழந்து தி.மு..க சின்னத்தில்போட்டியிடவில்லை தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம்.
ஜெயலலிதா:
இந்நிலையில் மீண்டும் முதல்வர் குறுக்கிட்டு கூறுகையில், ஆஸ்டின் கொள்கை பற்றி பேசுவது விந்தையாகஇருக்கிறது.கருணாநிதி ஒரு தீய சக்தி. அவரை எதிர்ப்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவைத் துவக்கினார்.
ஆனால் அவருடைய ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர்.பற்றி பேசு ஆஸ்டினுக்கு தகுதி இல்லைஎன்றார்.
இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் கடும் கூச்சலிடவேஅவையில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
எதிர்கட்சி தலைவரும் தி.மு.க. எம்.எல்.ஏவுமான அன்பழகன்:
ஒரு கட்சியைப் பற்றியும். அதன் தலைவரைப்பற்றியும் இவ்வாறு கூறுவதை நான் கண்டிக்கிறேன். கருணாநிதியைதீயசக்தி என கூறியதற்கு என் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இந்த வாசகம் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படவேண்டும்.
ஜெயலலிதா குறுக்கிட்டு:
இது என் சொந்தக் கருத்தல்ல. எம்.ஜி.ஆரே பலமுறை இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க எம்.எல்.ஏ பரிதி இளம் வழுதி: எம்.ஜி.ஆர். யார் யாரைப்பற்றி என்னென்ன கூறினார் என நான் கூறவா?என ஆவேசமாக குரலெழுப்பினார்.
அன்பழகன்:
எம்.ஜி.ஆர் என்னென்ன பேசினார் என்பது கூறவது சரியல்ல. கருணாநிதியை தீயசக்தி எனகூறினீர்கள். அதே வார்த்தையை நாங்கள் கூறினால் இந்த அவை (நீங்கள்) ஏற்குமா? என கேட்டார்.
சபாநாயகர் காளிமுத்து:
இன்றைய முதல்வர் பற்றி முந்தைய முதல்வர் (கருணாநிதி) தரக்குறைவாக பேசிய கருத்துக்கள் அவைக்குறிப்பில்உள்ளன. முதல்வர் தற்போது எம்.ஜி.ஆர் சொன்ன கருத்தைத்தான் சொன்னார். இது தவறல்ல என்றார்.
ஜெயலலிதா:
கடந்த 5 ஆண்டுகளில் எங்களைப்பற்றி தி.மு.க.பயன்படுத்தாத இழி சொல்களே கிடையாது. அதை நாங்கள்தாங்கிக் கொண்டோம். இனிமேலும் நீங்கள் எதைப் பேசினாலும் அதைத் தாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம்என ஜெயலலிதா கூறினார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.