கூட்டணி கட்சிகளின் உதவியை நாடுகிறது திமுக
சென்னை:
அதிமுகவினரின் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குதிமுக அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாஜக பொதுச்செயலாளர் இல.கணேசன், மக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர்.அதிமுக தலைவர் திருநாவுக்கரசு, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்,விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன், தமாகா ஜனநாயகப் பேரவை தலைவர் சிதம்பரம்உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்டவுடன், திமுக எம்.எல்.ஏ.பரிதி இளம்வழுதி, தமாகா ஜனநாயகப்பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காண்ட்ராக்டரிடம் கமிஷன் பெற்ற வழக்கில் மேயர் ஸ்டாலினும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பாகப்பேசப்படுகிறது. அதனால் அதிமுக மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க திமுக அதன்கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனை நடத்துகிறது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசை எதிர்த்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஏற்கனவே கவர்னர்உரையை திமுக புறக்கணித்தது. திமுகவுக்கு ஆதரவாக அதன் கூட்டணிக் கட்சிகளும் சட்டசபையை புறக்கணித்தன.
அதே போல் அதிமுக அரசை எதிர்த்து மேற்கொள்ளப் போகும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கூட்டணிக் கட்சிகள்ஆதரவு தர வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications