மின்சாரம் திருடிய தொழிலதிபர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் 11 லட்ச ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தை திருடிய தொழிலதிபர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கோவை வேலாண்டிபாளையம் ராமசாமி நாயுடு வீதியில் வசிப்பவர் வேணுகோபால் (60). இவருக்குச் சொந்தமானகட்டடத்தில் ஒரு ஐஸ் கம்பெனி பிளாஸ்டிக் கம்பெனி, லேத் ஒர்க்ஷாப் ஆகியவை நடத்தப்பட்டு வந்தது.
இதற்குத் தேவையான மின்சாரத்தை அவர்கள் மீட்டரை ஓடாமல் செய்து எடுத்து உபயோகித்து வந்தது தெரியவந்தது. கடந்த பல மாதங்களாக நடந்த இந்த திருட்டு நடந்துள்ளது.
இந்த வகையில் ரூ. 11 லட்சத்து 26 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்புள்ள இழப்பு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டது.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications