குற்றாலத்தில் குளு குளு சீசன் ஆரம்பம்
குற்றாலம்:
திருநெல்வேலி மாவட்டம் குற்றலாத்தில் குளு குளு சீசன் ஆரம்பித்தது.
குற்றாலத்தில் கடந்த 2, 3 நாட்களாக குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
மலைப்பகுதிகளிலும் மழை பெய்த காரணத்தால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருகி, பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. மேலும் குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் இதமான தென்றல் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்வதால் இங்கும் நீர் வரத்துஅடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சீசனை அனுபவிக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளுக்கு வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
குற்றாலத்தில் வாழும் மக்களும் கோடையின் வெம்மையிலிருந்து விடுபட்டுள்ளனர். நீர் வரத்துஅதிகமாகியுள்ளதால் விவசாயிகளும் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications