அதிமுகவினரை மிரட்டிய தாமரைக்கனி கைது
சென்னை:
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.விடுதியில் அவரது அறையில்தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த போலீஸ் படை சனிக்கிழமை சென்னைக்குச் சென்று தாமரைக்கனியைக் கைது செய்தது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சுயேச்சையாகப்போட்டியிட்டு தோல்வியடைந்தார் தாமரைக்கனி.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட இவரது மகன் இன்பத்தமிழன் வெற்றி பெற்றார்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506 (2) ன் படி, இவர் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்பிரச்சாரத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் சுயேச்சை கவுன்சிலர் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் ஆகியோரைமிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக, தாமரைக்கனி தனது அறையில் மாட்டி வைத்திருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை எரித்தார் என்றும்கூறப்படுகிறது.
தன்னைப் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்ற போது தாமரைக்கனி நிருபர்களிடம் கூறுகையில், நான்திமுகவில் சேரப்போவதாக அறிவித்திருந்தேன். அதனால்தான் என்னைக் கைது செய்துள்ளார்கள்.
நான் ஜாமீனில் வெளிவந்து கண்டிப்பாக திமுகவில் இணைவேன் என்றார்.
யு.என்.ஐ.