For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க நீதிபதியான பெங்களூர் பெண்

By Staff
Google Oneindia Tamil News

சிகாகோ:

அமெரிக்காவின் சிகாகோவில் வாழும் ஒரு இந்தியப் பெண், அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதிஆகியுள்ளார்.

அவர் பெயர் ரீனா மேரி வான் டைன். இந்தியாவின் பெங்களூரில் பிறந்த ரீனா, 400 நீதிபதிகள் கொண்ட "குக்கவுன்ட்டி சர்க்யூட் கோர்ட்" என்றழைக்கப்படும் ஒரு நீதிமன்ற பெஞ்சுக்கு நீதிபதியாகியிருக்கிறார்.

அமெரிக்காவின் மிகப் பெரிய நீதிமன்றங்களில் ஒன்றான இந்த நீதிமன்றம் இல்லினாய்ஸில் உள்ளது. இந்தநீதிமன்றத்தில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட 11 நீதிபதிகளுள் ஒருவர்தான் ரீனா.

39 வயதான ரீனா, கடந்த 1987 முதல் 1999 வரை "குக் கவுன்ட்டி ஸ்டேட் அட்டார்னி" அலுவலகத்தில் துணைஅட்டர்னியாகப் பணியாற்றி வந்தார். மிக்சிகனில் உள்ள ஓக்லாந்து பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற இவர்,தற்போது இல்லினாய்ஸ் மாகாண ஆளுநரின் சிறப்பு சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார்.

"இது தன்னுடைய பல நாள் கனவாகும்" என்று கூறும் ரீனா, "என்னுடைய அம்மாவின் தொடர்ந்த பிரார்த்தனையும்இப்போது பலித்து விட்டது" என்றார். சிவில், குற்றவியல் என்று எந்த வகையான வழக்குகளிலும் திறம்படவாதாடுவதில் வல்லவராம் ரீனா.

வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி நீதிபதியாகப் பதவி ஏற்கும் ரீனா, சட்ட சம்பந்தமான பல இந்திய-அமெரிக்க,ஆசிய-அமெரிக்க சங்கங்களில் உறுப்பினராக இருக்கிறார். இவர் ஆசிய-அமெரிக்க வழக்கறிஞர் சங்கவிருதையும் வென்றுள்ளார்.

இவருடைய கணவர் மாத்யூவும் ஒரு அட்டார்னிதான். இவர்களுக்கு கிறிஸ்டன் என்ற 4 வயது மகள் இருக்கிறாள்.பைக்கிங், ரன்னிங், ஸ்விம்மிங் ஆகியவைதான் தன்னுடைய பொழுதுபோக்குகள் என்று கூறும் ரீனா, தன் மகள்பிறப்பதற்கு முன் ஒவ்வொரு சம்மரிலும் "டிரையத்லான்" போட்டிகளில் பங்கேற்று வந்ததாகப் பெருமையுடன்கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X