நாகர்கோவிலில் உழவர் சந்தையை மூட கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

வடசேரி (நாகர்கோவில்):

கன்னியாக்குமரி மாவட்டம் வடசேரியில் உழவர் சந்தையை மூடக்கூடாது என்று கூறி உழவர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமரி மாவட்டத்தில் மயிலாடியில் ஒரு உழவர் சந்தையும், வடசேரியில் ஒரு உழவர் சந்தையும் செயல்பட்டுவருகிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் செயல்படாத உழவர் சந்தைகள் மூடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் அறிவித்தார்.

இதையடுத்து வடசேரி உழவர் சந்தையை மூடப்போவதாக விவசாயிகளிடையே வதந்தி பரவியது.

இதையடுத்து வடசேரி உழவர் சந்தை வாசலில் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளுடன்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வடசேரி போலீஸார் அங்குள்ள உழவர் சந்தைக்கு வந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளைபோலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மறியல் செய்யக்கூடாது. ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தலாம் என்று எழுதி வாங்கிக் கொண்டு விவசாயிகளைவிடுவித்தனர்.

இதையடுத்து, சுமார் மூன்றரை மணி நேரம் விவசாயிகள் மூடாதே, மூடாதே உழவர் சந்தையை மூடாதே!விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே! என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலைந்து சென்று தாங்கள்கொண்டு வந்திருந்த காய்கறிகளை விற்பனை செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+