வங்கதேச குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டாக்கா:

வங்கதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தகுண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.

வங்கதேசத்தின் கோபால் கஞ்ச் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க மிஷன் சர்ச்சில்ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததாகப் போலீஸார் கூறினர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வெடிகுண்டுநிபுணர்களும்,போலீசாரும் விரைந்துள்ளனர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்த வெடிகுண்டு விபத்தை வன்மையாககண்டித்துள்ளார். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளைக்கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கதேசத்தின் புத்தாண்டு தினத்தையொட்டி ஏப்ரல் மாதம் 14ம் தேதி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் வெடிகுண்டு விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்என்பது குறிப்பிடத்சதக்கது.

கடந்த ஆண்டு ஹசீனாவின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அவர் கலந்துகொள்ளவிருந்த கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்ததும்நினைவுகூறத்தக்கது.

ஹசீனாவுக்கும், அவரது சகோதரி ஷேக் ரெகானாவுக்கும் வங்கதேச அரசு பாதுகாப்பைபலப்படுத்தியுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+