For Daily Alerts
Just In
மதானி மருத்துவமனையில் அனுமதி
கோவை:
கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட கேரளமக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவர் அப்துல்நாசர் மதானி கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மதானி, கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்படிருந்தார்.
இப்போது அவருக்குத் திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து கோவை அரசுமருத்துவமனையில் வெளிநோயாளிகச் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் அவரது உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசுமருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Story first published: Sunday, June 3, 2001, 5:30 [IST]