நேபாள அரசர் குடும்ப கொலைகள்: புதிய தகவல்
காத்மாண்டு:
நேபாள மன்னர் குடும்பத்தினரை இளவரசர் பிரேந்திரா சுடவில்லை. துப்பாக்கிஎதிர்பாராத விதமாகத்தான் வெடித்தது என நேபாள நாட்டின் தற்காலிக மன்னரானஞானேந்திரா கூறியுள்ளார்.
இதனால் நேபாள மன்னர் கொலை வழக்கில் நீடித்து வரும் குழப்பம் மேலும்அதிகரித்துள்ளது.
நேபாள மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி ஐஸ்வர்யா உள்ளிட்ட மன்னர்குடும்பத்தினர் 11 பேர் இளவரசர் பிரேந்திராவால் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.பின்னர் பிரேந்திரா தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
இந்த கொலை பற்றி பல செய்திகள் வந்தன. தனக்கு பிடிக்காத பெண்ணை தனக்குமணம் செய்து வைக்க முயற்சித்ததால் கோபம் கொண்ட பிரேந்திரா மன்னர்குடும்பத்தை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் மன்னர் ஆட்சியை நேபாளத்தில் ஏற்படுத்த வேண்டும் என பிரேந்திராவற்புறுத்தியதாகவும், அதற்கு மன்னர் ஒப்புக் கொள்ளாததால் அவர்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மன்னரும், ராணியும்ஜோதிடத்தைக் காரணம் காட்டி மறுத்ததால் பிரேந்திரா சுட்டுக் கொன்றார் என்றும்கூறப்படுகிறது
இந்தக் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில்,நேபாளத்தின் தற்காலிக மன்னராகபொறுப்பேற்றுள்ள ஞானேந்திரா கூறுகையில், துப்பாக்கி எதிர்பாராத விதமாகவெடித்ததால்தான் மன்னர் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் குண்டுக்காயம்பட்டவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குதான் அவர்கள்இறந்தனர் என கூறியுள்ளார்.
இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னரையும், ராணியையும்,மன்னர்குடும்பத்தினரையும சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொன்ற பிரேந்திராஇன்னமும் கோமாவில் இருந்து வருவதால், ஞானேந்திரா தற்காலிக மன்னராகநியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோமாவில் இருக்கும் பிரேந்திராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர் உயிர் பிழைத்த வந்தால் உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்லப்பட்ட மன்னர் குடும்பத்தினரின் உடல்கள் நேற்று நேபாளத்தில் சனிக்கிழமைநேபாளாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்கள் உடல்கள்எரியூட்டப்பட்டன. ஏராளமான மக்கள் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications