For Quick Alerts
For Daily Alerts
Just In
பார்சலில் வெடிமருந்து, தோட்டா... உடுமலையில் பரபரப்பு
கோவை:
உடுமலைப்பேட்டை அருகே வெடிமருந்து, தோட்டாக்களுடன் ஒரு பார்சல்கிடைத்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலைப் பேட்டை அருகே கொழுமம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒருதோட்டத்தில் மர்மப் பார்சல் ஒன்று கிடைந்தது. இது அட்டைப்பெட்டியாககிடந்ததையடுத்து சந்தேகமடைந்த சிலர், போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் வந்து பெட்டியைச் சோதனை செய்தனர். அப்போது அதில், வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பார்சலை மரத்தடியில் போட்டுச் சென்றவர்கள் யார் என்பது பற்றி போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Story first published: Sunday, June 3, 2001, 5:30 [IST]