அனாதை குழந்தைகளுக்கு அன்பு இல்லம் ஆதரவு
கோவை:
குடும்பப் பிரச்னையால் இரு பெண் குழந்தைகளை அனாதையாக விட்டுச் சென்றார்தாய். கோவை அன்பு இல்லம் அக்குழந்தைகளை அரவணைத்துக் கொண்டுள்ளது.
திருப்பூரில் நேதாஜி நகரில் கிளினிக் வைத்திருக்கிறார் டாக்டர் விஜயலட்சுமி. இவரதுகிளினிக்கிற்கு தனலட்சுமி (30) என்ற பெண், தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தார்.
அவர்கள் இருவருக்கும் தலையில் காயம் இருந்தது. இந்தக் காயத்திற்கு விஜயலட்சுமிமருந்து போட்டுக் கொண்டிருந்தபோது, வெளியிலிருந்த தனலட்சுமி திடீரெனமாயமாகி விட்டார்.
சிறிது நேரத்தில் திரும்பி விடுவார் என அவர் காத்திருந்தார். ஆனால், வெகுநேரம்ஆகியும் தனலட்சுமி திரும்வில்லை. இதனால், விஜயலட்சுமி கோவையில் உள்ளகுழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு தகவல் கொடுத்தார்.
டான்பாஸ்கோ அன்பு இல்லம் என அழைக்கப்படும் இந்த இல்லம், இருகுழந்தைகளையும் அழைத்துச் சென்றது. பின்னர், இக் குழந்தைகளிடம் அன்புஇல்லத்தின் தலைவர் அருள் ஜான் விசாரித்தபோது, தங்களது பெயர் கவிதா (8),சரண்யா (6) எனவும் அக்குழந்தைகள் கூறியுள்ளனர். தங்களுடைய தாயை தந்தைஅடித்துத் துன்புறுத்துவதாகவும், அப்போது தங்களுக்கும் அடி விழும் எனக்கூறியுள்னர்.
தங்களுடைய தந்தை டெய்லராகப் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளனர். இக்குழந்தைகள் திருப்பூரில் எப்பகுதியில் வசித்து வருகிறோம், பெற்றோர் யார்என்பதைத் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். அவ்வாறு தெரிவித்தால், தங்களதுபெற்றோர்களுடன் சேர்த்து வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயம் அவர்களுக்குஏற்பட்டுள்ளது.
இதனால், குழந்தைகள் சரியான தகவலைக் கூற மறுப்பது வேதனைக்குரியது எனத்தெரிவித்தார் ஜான்.