மதானியை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல்நாசர் மதானியைப் பார்க்க அவரது உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை.

உரிய சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரது கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர்.

கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் கடந்த 1998ம் ஆண்டு நடந்தது. அப்போது இந்த குண்டு வெடிப்புச்சம்பவத்தில் கேரள மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்புள்ளதாக கூறிகைது செய்யப்பட்டார்.

மதானி கோவை சிறையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். தற்போது குண்டு வெடிப்புவழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. வெளி நோயாளியாகச் சிகிச்சை பெற்று வந்தஅவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். இவரைக் காணஅவரது மனைவி மற்றும் குழந்தைகள் வந்தனர். ஆனால், மருத்துவமனையில் சென்று பார்க்க அவர்கள்அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து கேரள மக்கள் ஜனநாயக் கட்சியின் பொதுச் செயலர் பூந்துறை சிராஜ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

எங்களது கட்சித் தலைவர் எந்த வித விசாரணையுமின்றி சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 3ஆண்டுகளாக ஒரு வழக்கைச் சந்திக்க உள்ளே இருப்பது இந்திய வரலாற்றிலேயே இல்லாதது. ஏற்கனவேஅவருக்கு பல வகைகளில் உடல் நலம் குறைந்துள்ளார். நெஞ்சுவலி, முதுகு வலி என பல்வேறு பிரச்னைகளால்சிக்கித் தவித்து வருகிறார்.

தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கூட பத்திரிக்கைகளின் மூலம் தான் தெரிந்ததுகொண்டோம். எனவே, அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+