ஓட்டுச்சீட்டுக்கு இந்தியா "குட் பை"

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாட்டிலுள்ள 6.5 கோடி வாக்காளர்கள் இனி ஓட்டுச் சீட்டுக்கு ஒரு "குட் பை"சொல்லிவிட்டு, மின் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு "ஹாய்" சொல்லும் காலம்நெருங்கிவிட்டது என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் எம்.எஸ். கில் கூறினார்.

வரும் ஜூன் 14ஆம் தேதியுடன் தன்னுடைய பதவிக் காலத்தை நிறைவுசெய்யவிருக்கும் கில் நிருபர்களிடம் பேசும்போது:

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் முழுக்க முழுக்க மின் வாக்குப்பதிவுஎந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும். கடந்த 1999-நாடாளுமன்றத் தேர்தலில் 10சதவிகித மக்கள்தான் மின் வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தினார்கள்.

கடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளினால், ஏகப்பட்ட வாக்குகள்செல்லாமல் போயின. இது தவிர, அனைத்து வாக்குச்சீட்டுகளையும் ஒவ்வொன்றாகஎண்ண வேண்டிய நிலை ஏற்பட்டதால், அதிக நேரமும் விரயமாகியது. தேர்தல்முடிவுகளை அறிவிப்பதிலும் காலதாமதங்கள் ஏற்பட்டன.

1980-களில் ஒருசில தொகுதிகளில் மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது ஒரு மின் வாக்குப்பதிவு எந்திரத்தின் விலை ரூ.750 மட்டுமே. பலகாரணங்களினால் இவற்றைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. அனைத்துஎந்திரங்களும் கிடப்பில் போடப்பட்டன.

1995-ல் நான் பதவியேற்ற பிறகு, அவற்றையெல்லாம் தூசுதட்டி எடுத்தேன். புதிதாக3 லட்சம் மின் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ஆர்டர் செய்தேன். தற்போது ஒரு மின்வாக்குப்பதிவு எந்திரத்தின் விலை ரூ.12,000 வரை ஆகிறது.

அதற்குப் பிறகு, கடந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலில்தான், மீண்டும் மின்வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டன.தொடர்ந்து நடந்த பல மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் மின் வாக்குப்பதிவுஎந்திரங்களே பயன்படுத்தப்பட்டன.

கடந்த மே 10ஆம் தேதி, அஸ்ஸாம் தவிர, 4 மாநிலங்களில் நடந்த சட்டசபைத்தேர்தல்களில் முழுக்க முழுக்க மின் வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்பட்டன.இம்முறை இச்சோதனை முழு வெற்றி பெற்றது.

வாக்கு எண்ணிக்கைகள் வெகுவேகமாக எண்ணப்பட்டு, 3 முதல் 5 மணிநேரங்களுக்குள்ளாகவே முழு முடிவுகளும் தெரிவிக்கப்பட்டு விட்டன. இது ஒருபெரிய வெற்றி மட்டுமின்றி, மாபெரும் சாதனையாகவும் கருதப்படுகிறது.

மின் வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வாக்காளர்களின் பெயர்களும் அவர்கள் சார்ந்தகட்சிச் சின்னங்களும் இடம் பெற்றிருக்கும். தவிர, ஒரு பட்டனை அமுக்கினால்மட்டுமே போதும்; வாக்குப்பதிவு முடிந்துவிடும்.

முன்பு போல ஒரு விரல்நீள வாக்குப்பதிவு முத்திரை, இங்க் இதற்கெல்லாம் இப்போதுதேவையில்லாமல் போய்விட்டது. செலவும் குறைந்துவிட்டது. இதனால் கல்வியறிவுஇல்லாதவர்கள்கூட மிக எளிதாக வாக்களிக்க முடியும்.

மின் வாக்குப்பதிவு எந்திரத்தில் கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு என்ற பேச்சுக்கேஇடமில்லை. முன்பு பயன்படுத்தியது போல, செய்தித்தாள் போன்ற பெரிய பெரியவாக்குச் சீட்டுகளுக்கும் இனி அவசியம் இருக்காது. அந்த வாக்குச் சீட்டில்முத்திரையைப் பதித்து, அதை நான்காக, எட்டாக மடித்து ஓட்டுப் பெட்டிக்குள்திணிக்கவேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது.

மின் வாக்குப்பதிவு எந்திரத்தால், ஆரம்பத்தில் பல எதிர்க் கட்சிகளுக்கும் நான் பதில்சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. பலர் என்னை முட்டாள் என்றுகூடத்திட்டித் தீர்த்தார்கள். இந்த எந்திரத்தை அறிமுகப்படுத்திய ஒரே காரணத்திற்காக நான்என் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறிப் போராடினார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட, ஆரம்பத்தில் மின் வாக்குப்பதிவு எந்திரங்கள்வேலை செய்யவில்லை என்று "பலத்த குரலில்" புகார் கூறினார். அவருக்குச் சாதகமாகதேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்ததும், இதைப் பற்றி மூச்சே விடவில்லை.

ஆனால் மக்கள் தீர்ப்பு சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்சாதகமாகவே அமைந்துவிட்டது. ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு இதுவும்ஒரு பெரிய ஜனநாயக வெற்றிதான் என்றார் 65 வயதை நிறைவு செய்யும் கில்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+