ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பந்தாட்டம் தொடங்கியது
கோவை:
அதிமுக ஆட்சியைப் பிடித்தது முதல் இதுவரை ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் தூக்கி அடிக்கப்பட்டு வந்தனர்.
தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வரின் செயலகத்தில் இருந்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் எந்தப்பதவியும் தரப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். ஆனால், இதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்இடம் மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர்.
இப்போது அதுவும் தொடங்கிவிட்டது.
கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் அதிரடியாய் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டக் கலெக்டராக இருந்துவந்த சந்தானம் தற்போது சென்னையில் உள்ள நகர வளர்ச்சிக் குழுமத்தின்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மாவட்டகலெக்டராகப் பதவி வகித்து வந்தார்.
கோவை மாவட்டக் கலெக்டராக தற்போது கே.செல்லமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில்சமூகநலத் துறை இயக்குனர் பொறுப்பில் இருந்தவர்.
கோவை மாநகராட்சிக் கமிஷனராக இருந்த ஹிதேஸ்குமார் மக்வானாவும் மாற்றப்பட்டுள்ளார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு தான் மாறுதலில் கோவை வந்தார். அவர் தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக டி. கார்த்திகேயன் மாநகராட்சிக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட புதிய கலெக்டரும், மாநகராட்சிக் கமிஷனரும் ஒரு வாரத்திற்குள் பதவி ஏற்பார்கள் எனத்தெரிகிறது.