நேபாள இளவரசர் திபேந்திரா மரணம்
காட்மாண்டு:
நேபாள அரசர் பீரேந்திரா உள்பட தன் குடும்பத்தினர் 13 பேரை சுட்டுக் கொலை செய்த இளவரசர் திபேந்திராதிங்கள்கிழமை அதிகாலை காட்மாண்டு ராணுவ மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று தகவல்கள் தெரியவந்துள்ளன.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நோபள அரண்மனையில் விருந்து நடந்தது. இந்த விருந்தில் அரசர்பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா உள்பட அரச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது இளவரசர் திபேந்திராவின் திருமணம் பற்றி பேச்சு எழுந்தது. தான் காதலிக்கும் தேவயானி என்றபெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று திபேந்திரா கூறினார்.
இதற்கு அரசர் உள்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த திபேந்திரா அனைவரையும்துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். பின்னர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
இதில் அரசர், அரசி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் ராணுவ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த திபேந்திரா திங்கள்கிழமை அதிகாலை மரணமடைந்தார் .
இதற்கிடையே, இளவரசர் திபேந்திரா இந்தக் கொலைகளைச் செய்யவில்லை. தானியங்கி துப்பாக்கி வெடித்ததால்இந்த படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications