குருவாயூர் கோவிலுக்கு ஜெ. யானைக்குட்டி பரிசு
குருவாயூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானைக்குட்டி ஒன்றை காணிக்கைப் பரிசாகத்தருகிறார்.
சில கேரள ஜோதிடர்களின் ஆலோசனைபடி, தான் முதல்வரானால் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குயானைக்குட்டி ஒன்றை காணிக்கையளிப்பதாக ஜெயலலிதா நேர்ந்து கொண்டார்.
ஜோதிடர்கள் கணிப்பின்படி, ஜெயலலிதா தமிழக முதல்வராகவும் ஆகி விட்டார். அவர் பதவியேற்றவுடனேயேயானைக்குட்டி தேடும் படலமும் ஆரம்பித்தது. தற்போது 12 வயதான ஆண் யானைக்குட்டி ஒன்று கிடைத்துள்ளது.
இதுகுறித்து, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தேவஸ்தான நிர்வாகி கே.என். சதீஷ் என்பவருக்கு ஜெயலலிதா ஒருபேக்ஸ் மூலம் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு, விரைவில் அந்தயானைக்குட்டியைப் பெற்றுக் கொள்வோம் என்று சதீஷும் ஜெயலலிதாவுக்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
யானைக்குட்டி தவிர, ரூ.50 ஆயிரம் செலவில் இக்கோவிலில் பால்பாயாச சிறப்பு வழிபாடு செய்வதாகவும்ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications